துடுப்பாட்ட செய்தி
இந்தியா - இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் சமநிலையில் முடிவு
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:28.35 மு.ப GMT ]
இந்தியா - இலங்கை இடையே 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா நேற்று ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 669 ரன்கள் எடுத்து இருந்தது.

இஷாந்த் சர்மா 17 ரன்களுடனும், ஒஜா ரன் எடுக்காமலும் இருந்தனர்.
இன்று இருவரும் நிதானமாக ஆடி ரன் எடுத்தனர். 27 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த்சர்மா அவுட் ஆனார்.அத்துடன் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 707 ரன்கள் எடுத்தது. ஒஜா 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

கடைசி விக்கெட் ஜோடியான இஷாந்த் சர்மா-ஒஜா இருவரும் சேர்ந்து 45 ரன்கள் எடுத்து இருந்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா இலங்கையை விட 65 ரன்கள் முன்னணியில் இருந்தது.

அதை தொடர்ந்து இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்று ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் இரு அணிகளும் 2-வது இன்னிங்சை முடிக்க நேரம் இல்லை. எனவே. இரு நாட்டு கேப்டன்கள் பேசி ஆட்டத்தை டிராவில் முடித்தனர்.

இதனால் முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]