துடுப்பாட்ட செய்தி
சலனமற்ற ஆடுகளத்தில் எதுவும் செய்ய முடியவில்லை : தோனி
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:27.02 மு.ப GMT ]
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்ததையடுத்து இது போன்ற டெஸ்ட் போட்டிகளை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணித் தலைவர் தோனி கிண்டலடித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 1478 ரன்கள் குவிக்கப்பட்டு அதில் 17 விக்கெட்டுகளே 5 நாட்களில் விழுந்தது. இது போன்ற டெஸ்ட் போட்டிகளுக்கான ஆட்டகக்கள தயாரிப்பு குறித்து ஆங்காங்கே கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து கருத்து கூறிய தோனி:

`இது போன்ற ஆடுகளங்களில் 99.9 சதவீதம் முடிவு கிடைக்காது. ஆடுகளம் சவால் அளிக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். போட்டி அளிக்கக்கூடிய ஆடுகளம் என்றால், அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. பந்து நன்கு எகிறிச் செல்லும் வகையில் இருக்க வேண்டும்' என்றார்.

ஆட்டம் சமநிலை ஆவது 4-வது நாளிலேயே உறுதி ஆகி விட்டதால், ஒரு நாளுக்கு முன்பாக 4-வது நாளிலேயே டிராவில் முடித்திருக்கலாமா? என்று கேட்ட போது, அப்படி ஒரு யோசனை வந்திருந்தால் அதை நான் நிராகரித்திருக்க மாட்டேன் என்று தோனி பதில் அளித்தார். அவர் மேலும் கூறுகையில்:

கூடுதலாக ஒரு நாள் ஓய்வு கிடைப்பது எங்களுக்கு விருப்பம் தான். இது போன்ற ஆடுகளங்களில் இதுவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் தான். இது பற்றி நடுவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்சில் விளையாடியது. இதன் பிறகு கடைசி நாளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. எனவே ஒரு நாளுக்கு முன்கூட்டியே முடித்திருக்கலாம்.

பொதுவாக இந்திய துணை கண்டத்தில் உள்ள ஆடுகளம் மாறும் தன்மை கொண்டதாக இருக்கும். முதல் நாளில் இருந்தே இந்த நிலையை பார்க்க முடியும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் `ரிவர்ஸ் ஸ்விங்' செய்ய முடியும்.

ஆனால் இந்த சலனமற்ற ஆடுகளத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் 2-வது இன்னிங்சில் ஆடுகளத்தன்மை கொஞ்சம் மாறி இருந்தது. இதனை எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்' என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]