துடுப்பாட்ட செய்தி
முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 09:38.01 மு.ப GMT ]
ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவிர, 133 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது:

டெஸ்ட் அரங்கில், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த முரளிதரனுக்கு வாழ்த்துகள். இவரை யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், இவருக்கு போட்டியாக கருதப்பட்டார்.

இவர்களது சுழற்பந்துவீச்சை ஒப்பிடும் போது, முரளிதரன் சுழலை எதிர்கொள்வது சற்று கடினமானது. மிகவும் கவனமாக விளையாடினால் மட்டுமே, அவுட்டாகாமல் தப்பிக்க முடியும்.

முரளிதரன் சாதனையை முறியடிப்பது சாதாரன விஷயமல்ல. இதற்கு கடுமையாக போராட வேண்டும். சிறந்த வீரர்கள் அனைவரும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

இதேபோலதான் முரளிதரன், நல்ல "பார்மில்' இருக்கும் போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக வார்ன், கவாஸ்கர், மெக்ராத் உள்ளிட்டோரும் இதுபோன்று ஓய்வு பெற்றனர். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதவேண்டாம். ஒருநாள், "டுவென்டி-20', ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க காத்திருக்கிறார்.

முரளிதரனின் ஓய்வு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மனநிறைவு அளித்திருக்கும். இதனால் இவர்கள் அடுத்து வரும் டெஸ்டில், லசித் மலிங்காவின் பந்துவீச்சை சமாளித்தால் போதுமானது என்றார். 

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]